திருவாரூர். பிப். 16- மாணவர்களிடையே பிளவினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற துடிக்கும் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர் களை அணிதிரட்டுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் திரு வாரூரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்துணைத்தலைவர் எம்.கண்ணன் தலைமையேற்றார். மாநில செயலாளர் வி.மாரியப்பன், துணைத்தலை வர் க.நிரூபன்சக்கரவர்த்தி, மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநில செயலாளர் வி.மாரியப்பன் கூறியதாவது: கல்விநிலையங்களில் மாணவர்களி டையே மதமோதல்களை உருவாக்கு வது, பாடத்திட்டங்களில் புராண, இதிகாச புரட்டுக்கதைகளை திணிப்பது, கல்வி நிறு வனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட நிர்வாகி களை நியமிப்பது என மோடி அரசு ஆட்சிக்கு வந்ததுமுதல் செயல்பட்டு வருகிறது. அண்மை யில் கூட கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தடை போட்டதன் விளை வாக அந்த மாநிலத்தில் அமைதி சீர்குலைந் துள்ளது. மாணவர்களை மத ரீதியாக பிளவு படுத்த ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் கூட்டங்கள் முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதன் காரணமாக நாடு முழுவதும் மாண வர்களை ஒற்றுமைப்படுத்துகிற முயற்சியை இந்திய மாணவர் சங்கம் முன்னெடுத்துள்ளது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை என்பது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால் தற்போதைய மோடி அரசு இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்துகிறதோ என்று எண்ணும் வகையில் மாநில அரசிற்கு எதிராக ஆளுநர்களை பயன்படுத்தி இந்திய அர சியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக நட வடிக்கைகளை எடுத்து மாநில அரசுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் மூலம் இரட்டை ஆட்சி முறையை மீண்டும் மோடி அரசு அமல்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு எதிராக எதிர்கட்சி ஆளக்கூடிய மாநில மக்களும் அரசுகளும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் மேற்கு வங்கத்தில் அம்மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தமிழகத்திலும் ஆளுநர் அரசியல் சாச னத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த மக்களின் உணர்வாக அனை த்துக் கட்சிகளும் இணைந்து சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தமிழக ஆளுநர் குடி யரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக சட்ட பேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிய தோடு மட்டுமல்லாமல் சமூக நீதிக்கு எதிராக தனது சொந்த கருத்துக்களையும் தெரி வித்துள்ளார். இது சட்டமன்ற மாண்பை குலைப்பதாக உள்ளது. தமிழக சட்டமன்றம் மீண்டும் கூடி நீட் தேர்விற்கு எதிராக ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இதனை அர சியல் சாசனப்படி குடியரசு தலைவருக்கு ஆளு நர் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆளுநரை பயன்படுத்தி ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராடக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் கல்விச் சூழல் முற்றிலுமாக மாறியுள்ளது. கல்வி நிலையங்கள் செயல்படாததால் மாண வர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு எதிர்கா லம் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏராள மானோர் கல்வி நிலையங்களில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ள னர். குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. மாணவர்களுக்கு இன்னமும் லேப்டாப் வழங்கப்படவில்லை. டெண்டர் கோரப்படு வதில் விலை அதிகமாக உள்ளதாக காரணம் கூறப்படுகிறது. மாணவர்களின் நலனை முன்னிறுத்தி கல்விக்கு செலவிடுவது முதலீடு எனக்கருதி தமிழக அரசு செயல்பட வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்பு களுக்கு மாறாக 1-ஆம் வகுப்பு முதல் நேரடி கல்விச்சூழலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நீட் தேர்வை எதிர்த்தும், மாணவர்களின் நலனிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அர சைக் கண்டித்தும் மாநில நலனிற்கு எதிராகச் செயல்படும் தமிழக ஆளுநரை திரும்ப அழை க்க வலியுறுத்தியும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரியும் வரும் மார்ச் மாதம் 1,2 ஆகிய தேதிகளில் சென்னையில் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்ட த்தில் ஈடுபட மாணவர் சங்க மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்டத் தலைவர் பா.ஆனந்த், செயலாளர் ஹரி.சுர்ஜித் ஆகியோர் உடனிருந்தனர்.