districts

அரசு ஊழியர்கள்  தற்செயல் விடுப்பு போராட்டம்

திருவாரூர், மார்ச் 29-  தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதி யத்தில் பணி புரிந்து வரும் எம்ஆர்பி செவிலியர்கள், வரு வாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர் புறநூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட  வேண்டும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிட ங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல்  விடுப்பு எடுத்து திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவல கம், வட்ட அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.பிரகாஷ், பொருளாளர் செ. செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் 1935 அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.