திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை வியாழனன்று (நவ 17) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ெஜ.கோவிந்தராஜன், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆ.ரிஷப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டாலின் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.