districts

img

சுடுகாட்டுக்கு இடம்கேட்டு இறந்தவர் உடலை சாலையோரம் எரித்து மக்கள் போராட்டம்

திருவள்ளூர், ஏப். 7-  திருப்பதியில் இருந்து நெமிலிச்சேரி வரை ரூ.364 கோடி செலவில்  4 வழிச்சாலை அமைய உள்ளது.  இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதி யில் பொது மக்கள் பல ஆண்டுகளாக  பயன்படுத்தி வந்த சுடுகாடு வழியாக செல்கிறது. இதையடுத்து அந்த சுடுகாடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உடல்களை எரிக்க வும், புதைக்கவும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள  மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியுள்ள னர். ஆனால் அதனை ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றொரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே காக்களூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(48) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். சுடு காடு நிலம் வழங்காததை கண்டித்து அவரது உடலை அப்பகுதியில் 4 வழிச்சாலை பணி நடக்கும் இடம் அருகே சாலையோரம் திடீரென எரித்து  கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், காவல்துறையினர்  பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாடு நிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.