திருவள்ளூர், ஜூலை 17- மீஞ்சூர் அருகே நாலூரில் வரதட்சணை கொடுமை தாங்க முடி யாமல், இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் அதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது
]திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாலூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சீனு-சுகுணா தம்பதியின் மகள் ரேவதியை (வயது 25), அதே கிராமத்தை சேர்ந்த மாரி-சாந்தி ஆகியோரின் மகன் முத்தழகு (29), ஆகியோருக்கு 2017 ல் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கணவர் முத்தழகு ஓட்டுநராக பணி யாற்றி வருகிறார். இந்த நிலையில் ரேவதியின் மாமியார் சாந்தி, மாமனார் மாரி, நாத்தனார் கீதா, நாத்தனார் கணவர் சுரேஷ் ஆகிய 4 பேரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு ரேவதியை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
குடும்பப்பிரச்சனையின் போதெல்லாம் வீட்டை விட்டு வெளி யேறும்படி அடிக்கடி துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்த நிலையில் மாமியாரின் கொடுமை தாங்க முடி யாமல் கடந்த ஜூலை 8 அன்று மீஞ்சூர் காவல் நிலையத்தில் ரேவதி குழந்தைகளுடன் புகார் கொடுக்க சென்றுள்ளார். மீஞ்சூர் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் சாந்தி என்பவர் புகார் மனுவை வாங்காமல், உன்னுடைய மாமனார், மாமியார் சாகும் வரை நீங்கள் குடும்பத்துடன் எங்கேயாவது வாடகை வீட்டில் பார்த்துக் கொண்டு சென்று விடுங்கள் என அறிவுரை கூறி யுள்ளார். என் கணவர் தின கூலி வேலை செய்கிறார், குழந்தை களை பார்த்துக் கொண்டு வாட கையை செலுத்த முடியாது என்று ரேவதி கூறியுள்ளார். எனினும் உதவி ஆய்வாளர் சாந்தி உன் புகாரை வாங்க முடியாது. நீ அம்பத்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் மனு அளிக்கவேண்டுமென பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
வாழ வழியின்றி நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற ரேவதிக்கு உதவி ஆய்வாளர் சாந்தி புகாரை வாங்காமல் தட்டிக் கழித்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் .வீட்டிற்கு வந்த ரேவதி தன் தாய் தந்தை யிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாமனார், மாமி யார் கொடுமைகளை சொல்லி அழுதுள்ளார். இதனை கேட்டதும் ஜூலை 16 அன்று ரேவதியின் அப்பா, அம்மா தன் மகள் ரேவதியை பார்க்க நாலூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.அப்போது ரேவதியின் மாமியார், மாமனார் ஆகியோர் வீட்டுக்கு வந்த ரேவதியின் குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் பேசி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி, விரக்தியடைந்த ரேவதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான மாமனார், மாமியார் நாத்தனார், நாத்தனார் கணவர் ஆகியோரை காவல்துறையினர் இதுவரை கைது கைது செய்ய வில்லை.
மாதர் சங்கம் கோரிக்கை
ரேவதி தற்கொலைக்கு காரண மான அவரது கணவர் உறவினர் அனைவரையும் உரிய சட்ட பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், ரேவதியின் புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுத்தி ருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம்.
புகாரை வாங்க மறுத்த மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாந்தி மீதும் வழக்கு பதிவு செய்ய அரசும், காவல்துறை உயர் அதி காரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொன்னேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் மாதர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் இ.மோகனா, செயலாளர் ஏ.பத்மா, நிர்வாகிகள் ரம்யா, ரமணி, காமாட்சி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மீஞ்சூர் பகுதி நிர்வாகிகள் புவனேஸ்வரி, கவிதா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.