திருவள்ளூர், ஜூலை 4- அரசு பட்டா வழங்கிய இடத்தில் குடி யிருந்து வரும் மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடவும், இடித்த இடத்திலேயே மீண்டும் அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை வட்டம், எஸ்.வி.ஜி புரம் கலைஞர் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலை யில் வியாழனன்று (ஜூலை 4), அதிகாலையில் வருவாய்த் துறை யினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினரை குவித்து ஜேசிபி எந்திரங்களோடு சென்று வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து தள்ளி ராட்சத எந்திரம் மூலம் 51 வீடுகளை இடித்து தரை மட்டம் ஆக்கினர். இதை சிபிஎம் வன்மையாக கண்டிப்பதாக மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் தெரிவித்துள்ளார்.
வீடுகளை இடிப்பது குறித்து எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்க வில்லை குடியிருக்கும் மக்களை அழைத்து அரசு நிர்வாகம் பேச வில்லை, வீடுகளை இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டதால் குடியிருந்த மக்கள் நிர்க்கதியாய் நிற்கின்றனர். அந்த மக்களோடு திருத்தணி கோட்டாட்சியர், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் யாரும் நேரடியாக இதுவரை பேசவில்லை. மேலும் வீடு இழந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ராஜேந்திரன், ஆர்கே பேட்டை வட்டச் செயலாளர் ஏ.சிவ பிரசாத், வட்டக் குழு உறுப்பினர் குப்பன் உள்ளிட்ட 25 பேரை வலுக் கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்துள்ளனர்.
எஸ் வி ஜி புரத்தில் சமத்துவபுரம் அமைப்பதற்காக 2000 ம் ஆண்டில் அன்றைய முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது ஆதி திராவிட நலத்துறை மூலம், திருத்தணி தனி வட்டாட்சியர் சர்வே எண் 112/2, 3A ஏ வில் தாழ்த்தப்பட்டவர்கள் 7 குடும்பங்கள், பிற்படுத்தப்பட்டவர்கள 86, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 8, இஸ்லாமியர்கள் 12 என 113 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப் பட்டது. பட்டா வழங்கிய இடம் முட்புதர்க ளாலும் செல்வதற்கு வழி இல்லாத நிலை இருந்து வந்தது. அப்பொழுது அவர்களால் சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலை இருந்தது. அதன் பிறகு 54 பேர் வீடுகள் கட்டி குடி யிருந்து வருகிறார்கள்.இந்த சூழலில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னால் ஆர்கே பேட்டை வட்டாட்சி யர் மூலம் இந்த இடம் ஆதிதிராவிட நலத் துறைக்கு சொந்தமானது.
அத்துமீறி யாரும் ஆக்கிர மிக்க கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதை அறிந்த குடியிருக்கும் மக்கள் தங்களுடைய அரசு வழங்கிய பட்டாவை எடுத்துச் சென்று கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி திருத்தணி கோட்டாட்சியரை நேரில் சென்று மனு அளித்துள்ளனர். வரு வாய்த்துறை வைத்த அறிவிப்பு பலகையை எடுக்கவும் மேலும் தங்க ளது பட்டாவை கணினியில் பதி வேற்றம் செய்து, கணினி பட்டா வழங்க வேண்டும் என்றும், குடி யிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் மனு அளித்துள்ளனர். மேலும் கடந்த மாதம் 7ஆம் தேதி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். கடந்த மாதம் 28 ஆம்தேதி சிபிஎம் சார்பில் குடி யிருக்கும் மக்களுக்கு ஆதரவாக ஆர் கே பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் தனி பிரிவிற்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள னர். இவற்றை எதை யும் பொருட் படுத்தாமல் ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட வரு வாய்த் துறையினர் இந்த 51 வீடு களை மனிதாபிமானமின்றி தரைமட்ட மாக்கினர் . ஆர்கே பேட்டை அருகில் உள்ள ராஜா நகரத்தில் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு 1994 மற்றும் 2001 இல் 107 பேருக்கு குடிமனை பட்டா வழங்கப் பட்டது. இன்று வரை அவர்களால் சாதிய பாகுபாடு காரணமாக குடி யேற முடியவில்லை. தற்போது ராஜா நகரத்தில் உள்ள தலித் மக்களை எஸ்விஜிபுரம் பகுதியில் குடி யமர்வு செய்வதற்கான ஏற்பாடு நடை பெறுவதாக தெரி கிறது.
அதற்காகவே 2000 ம் ஆண்டு பட்டா வழங்கி அந்த இடத்தில் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அத்துமீறி செய்திருக்கிறது திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகம். எனவே தமிழக முதல்வர் எஸ்விஜி புரம் கலைஞர் நகரில் 2000 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது சமூக நீதி சமத்துவ நோக்கத்தோடு சமத்துவபுரம் அமைக்க வழங்கப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து 113 பேருக்கு கணினி பட்டா வழங்க வேண்டும் என்றும் தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட அதே இடத்திலேயே அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்க வேண்டும். கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபால் அறிக்கை ஒன்றில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.