திருவள்ளூர், ஜூலை 6- ஆவாஜிபேட்டை முதல் மாளந்தூர் வரையுள்ள குண்டும் குழியுமான சாலையில் நடைபெறுவதாக இருந்த நூதனப் போராட்டத்தை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மாதர் சங்கத்தினர் ஒத்திவைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஆவாஜிப்பேட்டை முதல் மாளந்தூர் வரை 3 கி.மீ. தூரம் ஒன்றிய சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இயக்கப்படுகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்ப வர்களின் தனியார் வாகனங்களை இயக்குவதிலும் சிரமப்படு கின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மாதர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒன்றியத்தில் போதிய நிதி இல்லாததால் மாவட்ட நிர்வாகமே போதிய நிதியை ஒதுக்கி தார்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சாலையில் ஏர் உழுது, நாற்று நடும் நூதனப்போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, வட்டாட்சியர் ரமேஷ், துணை கண்காணிப்பாளர் சாரதி உள்ளிட்ட அதிகாரிகள் தலைவர்களிடம் பேச்சு நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று முதல் கட்டமாக சாலையை தற்காலிக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படும் என எழுத்து பூர்வமாகஉறுதியளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு மாதர் சங்கத்தின் கிளை செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கினார்.இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ரமா, பகுதி செயலாளர் எஸ்.ரம்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.சுவேதா, சிபிஎம் ஊத்துக் கோட்டை வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.விஜயன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஜெ.ரமேஷ், வி.சோலை, விதொச பகுதி செயலாளர் பி.அருள், விவசாய சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முத்து, கரண்ட் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.