திருவள்ளூர், டிச 21- ஆர்.கே.பேட்டையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 12 இருளர் இன குடும்பங்களுக்கு குடிமனை பட்டா கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட எருமி, எஸ்.வி.ஜி.புரம். உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகிய அலுவலகங்கள் முன்பு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக குடிமனை பட்டாக்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்தது. இதனை சம்மந்தப்பட்ட நபர்களிடம் கொடுக்காமல் அமைச்சர் மூலம் வழங்க வேண்டும் என்பதற்காக காலதாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் அரசு நிகழ்ச்சி யில் பட்டாக்களை வழங்கி னர். இதனை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் புதனன்று (டிச 21) ஆர்.கே.பேட்டையில் நடைபெற்ற பேரவையில் எருமி ஊராட்சிக்கு உட்பட்ட அஸ்வரேவந்தபுரத்தில் 8 குடும்பத்திற்கும், எஸ். வி.ஜி.புரத்தில் 4 குடும்பங் களுக்கும் குடிமனை பட்டக்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் என்.வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.ஜி.கணேசன், சேவ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஏசுபாதம் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.