சிஐடியு மூத்த நிர்வாகி கருணாமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் திருவண்ணாமலை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நடைபெற்றது. சிஐடியு நிர்வாகி இரா.பாரி, நாகராஜன், எஸ்.லட்சுமி நாராயணன், அ.சேகர், ஆட்டோ சரவணன், சிபிஎம் நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், தங்கமணி, தொமுச பேரவை செயலாளர் க.சவுந்தரராஜன், ராஜேந்திரன் (ஏஐடியுசி), உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.