திருவண்ணாமலை,ஜூன் 23- திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அடுத்த படி அக்ரஹாரம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சுகாதாரத் துறை கிராம செவிலியர் சசிகலா வியாழனன்று (ஜூன் 23) சத்து மாத்திரை கொடுத்துள்ளார். சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மதிய உணவாக எலு மிச்சை சாதம் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளனர். அதன்பின் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதை யடுத்து 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து காரப்பட்டு ஆரம்ப சுகா தார நிலையம் வந்த மாண வர்களின் பெற்றோர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட னர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.