திருவண்ணாமலை, ஜூன் 10- திருவண்ணாமலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மெத்தனத்தால் கரும்பு விவசாயிக்கு ரூ.16 லட்சம் நட்டம் ஏற்பட்டது. திருவண்ணாமலை, காஞ்சி சாலையில் உள்ள சி. நம்மியந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி அருள் ஆனந்த். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கரும்பு நடவு செய்தார். அந்த கரும்பு பயிரை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் பதிவு செய்திருந்தார்
. இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு இந்த கரும்பு அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அப்போது அங்கு வந்து பார்த்த, திருப்பத்தூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை அலுவலர்கள், அந்த கரும்பு நல்ல தரமுடன் உள்ளதால், விதை கரும்பாக பயன்படுத்துவதற்கு ஏற்றது. எனவே இப்பொழுது அறுவடை வேண்டாம். விதை கரும்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் கூறியபடி கரும்பை விதைக்கு தேர்வு செய்து அறுவடை செய்யவில்லை.
இதை யடுத்து 2023 ஆம் ஆண்டு தொடர் மழை யின் போது வெட்டுவதற்கு உத்தரவு கொடுத்துள்ளனர். அப்போது பெய்த தொடர் மழையால் கரும்பு பயிரில் வெள்ளம் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது வரை அந்த கரும்பை ஆலை நிர்வாகம் அறுவடை செய்யவில்லை. மாற்று ஏற்பாடாக, அருகே உள்ள பண்ணாரி சர்க்கரை ஆலை சார்பில் அறு வடை செய்யும் வகையில், டைவர்ஷன் உத்தரவு வழங்கவும் ஆலை நிர்வாகம் மாற்ற உள்ளதாகவும் தெரிகிறது.
விவ சாயி அருள் ஆனந்த் பல முறை, ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், கரும்பு பயிர் அறுவடை செய்யப்பட வில்லை. இந்நிலையில், வேறு வழியின்றி விவசாயி அருள் ஆனந்த் கரும்பு பயிரை, தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் தனக்கு 4 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரி வித்தார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் டி.கே .வெங்கடேசன் கூறியபோது, விவசாயி அருள் சாகுபடி செய்த கரும்பு பயிரை பதிவு செய்து, உரிய காலத்தில் அறுவடை செய்யாமல் அலட்சியப் போக்குடன் இயங்கிய ஆலை நிர்வாகம், விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.