திருவண்ணாமலை, மார்ச் 31- திருவண்ணாமலை அடுத்த இனாம் காரியந்தல் கிராமத்தில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. துர்க்கை நம்மியந்தல் கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் முருகை யன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.பிரகநாதன், ஒன்றியச் செயலா ளர் பன்னீர், தலைவர் அண்ணாமலை, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் ஆகியோர் பேசினர். அப்போது அங்கு வந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும், ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் பராமரிப்பு கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி னர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்ததையடுத்து, காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.