திருவண்ணாமலை, ஜூன் 16- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம்-பெங்களூரு சாலையில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்கில் தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரும் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோவில் பூசாரி ஜானகிராமன் மகள் ஜெயஸ்ரீ என்பவரும் காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திரு மணம் செய்து கொண்டனர்.இந்த திரு மணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பூசாரி, தனது மருமகன் விஜியை அடி யாட்கள் மூலம் கொலை செய்ய சில நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த விஜியை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஜூன் 14 நள்ளிரவு சரமாரியாக வெட்டினர்.
இதை தடுக்க முயன்ற மற்றொரு ஊழியரையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜி உடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலை யில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்து வந்த செங்கம் காவல் துறையினர் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து விஜி கொலை செய்ய முயன்ற பூசாரி ஜானகிராமன், அவரது மகன் ராஜேஷ் அவர்களுக்கு உதவிய 3 பேர் என மொத்தம் 5 பேரை செங்கம் காவல் துறையினர் கைது செய்தனர்.