districts

img

திருப்பூர் வடக்கு நகரம், ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

திருப்பூர், நவ.27- திருப்பூர் வடக்கு மாநகரம் மற்றும் வடக்கு ஒன்றிய கமிட்டியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மொத்தம் 527 தீக்கதிர் சந்தா சேர்க்கப்பட்டு அதற் குரிய தொகை ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரத்து 700 ஒப்படைக்கப்பட்டது.

 திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை பெருமாநல்லூரில் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி தலைமையிலும், நெருப் பெரிச்சலில் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.தனராஜ் தலைமையிலும் சந்தா ஒப்படைப்பு பேரவை கூட்டங்கள் நடை பெற்றன.

இதில் தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் கலந்து கொண்டு தீக்கதிர் சந்தா தொகையைப் பெற் றுக் கொண்டார். வெங்கமேட்டில் திங்க ளன்று முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் தலைமையிலும், பிச்சம் பாளையம் புதூரில் குருவாயூரப்பன் நகர் செல்வகுமார் தலைமையிலும் நடைபெற்ற சந்தா ஒப்படைப்பு பேரவை யில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கலந்துகொண்டு தீக்கதிர் சந்தாத் தொகையை பெற்றுக் கொண்டார்.  சந்தா ஒப்படைப்பு பேரவைகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் ஆர்.காளியப்பன், மாவட்ட குழு உறுப் பினர் ஆ.சிகாமணி மற்றும் ஒன்றிய  குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள், கட்சி ஊழியர்கள் கலந்து கொண் டனர். இந்த இரு தினங்களில் நடை பெற்ற பேரவைகளில் ஆண்டு சந்தா 260 மற்றும் ஆறு மாத சந்தா 7 என மொத்தம் 267 சந்தாவிற்கு உண்டான தொகை ரூபாய் 5 லட்சத்து 27 ஆயிரத்து 350 ஒப்ப டைக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாநகரம் 

அதேபோல் திருப்பூர் வடக்கு மாநக ரத்தில் சேகரிக்கப்பட்ட ஆண்டு சந்தா 253 மற்றும் ஆறு மாத சந்தா 7 என மொத்தம் 260 சந்தாவிற்கான தொகை ரூபாய் 5 லட்சத்து 13 ஆயிரத்து 350 ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் ரங்க நாதபுரம், பத்மாவதிபுரம் மற்றும் ஓடக் காடு கிளை அலுவலகங்களில் திங்க ளன்று இந்த சந்தா ஒப்படைப்புப் பேர வைகள் நடைபெற்றன. இவற்றில் தீக் கதிர் கோவைப்பதிப்பு பொறுப்பா சிரியர் எம்.கண்ணன், கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் ஆகியோர் பங்கேற்று தீக்கதிர் சந்தா தொகையை பெற்றுக் கொண்டனர்.  இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப் பினர்கள் பி.ஆர்.கணேசன், வை.ஆனந் தன், ஆர்.மைதிலி, வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் மற்றும்  கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப் பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 திருப்பூரில் வடக்கு ஒன்றியத்தில் 267 சந்தாக்கள், வடக்கு மாநகரில் 260 சந்தாக்கள் என மொத்தம் 527 சந்தா சேகரிக்கப்பட்டு இதற்கான தொகை மொத்தம் ரூ.10 லட்சத்து 40 ஆயிரத்து 700 ஒப்படைக்கப்பட்டுள்ளது.