திருப்பூர், ஜூலை 17- ஒன்றிய மோடி அரசு அனைத்து தரப்பு மக் களையும் பாதிக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் புதிய மூன்று குற்ற வியல் சட்டங்களை உடனடியாக திரும்ப பெறக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடக்கு மாநகரக் குழு சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் செளந்தரராசன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகி ருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் வை. ஆனந்தன், மாநகரக் குழு உறுப்பினர் ராஜேந் திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். மைதிலி, மாநகரக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அவிநாசி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றியக் குழு சார்பில், வட்டாட்சியர் அலு வலகம் முன்பு புதனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, கனகராஜ் தலைமை வகித் தார். இக்கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி ஆகி யோர் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு ஒன்றியம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய குழு சார்பில் பெருமாநல்லூ ரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பி.கே.கருப்பசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.