districts

img

போதம்பாளையம் ஊராட்சியில் சிப்காட்டுக்கு நிலம் ஒதுக்கக்கூடாது தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தல்

அவிநாசி டிச.7- போதம்பாளையம் ஊராட்சியில் சிப் காட்டுக்கு நிலம் ஒதுக்க கூடாதென தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள் ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள போதாம்பாளைத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திங்களன்று நில உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில், விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் மதுசூதணன், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். வெங் கடாசலம், ஒன்றிய பொருளாளர் வேலுச் சாமி, ஒன்றிய துணைத் தலைவர் பழனிச் சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதில், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட போதம்பாளையம் ஊராட்சியில் சிப்காட் டுக்கு நிலம் ஒதுக்கக்கூடாது. அவிநாசி ஒன் றிய பகுதியில் உள்ள விவசாய நிலங் களை வேறு திட்டங்களுக்கு கையகப்ப டுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;