ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், திருப்பூர், ராயபுரம் ரவுண்டானா அருகே வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.