அவிநாசி, ஜூலை.18 15 தினங்களில் மனமகிழ் மன்றம் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்ப டும் எனவே போராட்டத்தை கைவிடும்படி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டதை அடுத்து, முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.
அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட சிந்தா மணி பேருந்து நிறுத்தம் அருகில் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 19 ஆம் தேதி மன மகிழ் மன்றத்தை முற்றுகையிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவிநாசி காவல் நிலையத்தில் வியாழனன்று டிஎஸ்பி சிவகுமார் தலைமையில், காவல் ஆய்வாளர் ராஜவேல் முன்னிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்வதாகவும், 15 தினங்களில் மனமகிழ் மன்றம் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவே போராட்டத்தை நிறுத்தி வைக்கும் படி டிஎஸ்பி கேட்டுக்கொண்டார். இதைய டுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், பேரூ ராட்சித் தலைவர் தனலட்சுமி பொன்னுச் சாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, பழனிச்சாமி, வேலுச்சாமி, பழனிச் சாமி, சிபிஐ சண்முகம், கோபால், முத்து சாமி, காங்கிரஸ் கட்சி சாய் கண்ணன், மதிமுக பாபு, பாஜக தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.