districts

img

ஓராண்டாக உதவித்தொகை வழங்கவில்லை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருப்பூர், ஜூலை 16-  ஓராண்டு காலமாக மாற்றுத்திறனா ளிகளுக்கு உதவித்தொகை நிலுவை யில் உள்ளது. அதை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாயன்று மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சீவ் தலைமையில் செவ் வாயன்று மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டனர். இதில், மாதம், மாதம்  வழங்க வேண்டிய உதவித்தொகை ஓர்  ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. அதை உடனடியாக வழங்க வேண் டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி புரியும் மாற்றுத்திறனாளிகள் நான்கு மணி நேரம் வேலை செய்தால் போதும்  என்று சட்டம் இருக்கையில். அதையும்  மீறி கூடுதலான நேரம் வேலை வாங்கு கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளி கள் என்றும் பாராமல் கடினமான வேலையில் ஈடுபடுத்துகின்றனர். இதன்  மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். வேண்டுகோள்கள் மற்றும் குறைகளை கூற திருப்பூர் மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திற னாளிகளை மரியாதைக் குறைவாக வும், அவமதிக்கும் வகையிலும் நடத்து கின்றனர். பல நாட்களாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக  ஏஏஒய் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், தாராபு ரம், உடுமலைப்பேட்டையில் 100 நாள்  வேலை திட்டத்தில் உள்ள சிக்கல்களை  நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஆட்சியர் அலுவலகத் தில் மாற்றுத்திறனாளிகள் மரியாதை குறைவாக நடத்தப்படுவது குறித்து உட னடியாக மாவட்ட ஆட்சியர் தலைமை யில் பணியாளர்கள் கூட்டம் போட்டு நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித் தார்.

இதையடுத்து முற்றுகை போராட் டம் கைவிடப்பட்டது. இன்னும் 3 மாத திற்குள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மீண்டும் போராட்டத் தில் ஈடுபடுவோம் என மாற்றுத்திறனாளி கள் கூறினர்.

இந்நிகழ்வில், சிஐடியு துணைத்த லைவர் கே‌.உண்ணிகிருஷ்ணன், தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக் கான சங்க மாவட்டச்செயலாளர் பா. ராஜேஷ், நிர்வாகிகள் ரோஸி, கமலக் கண்ணன், லோகநாதன், பொம்முதுரை  உட்பட திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.