districts

img

திருவனந்தபுரம் இளம் வயது மேயருக்கு இடுவாய் தோழர்கள் வாழ்த்து

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சியில் நாட்டின் இளம் வயது மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சி கிளை உறுப்பினர்கள் புதனன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும், தியாகிகள் இடுவாய் கே.ரத்தினசாமி, சீராணம்பாளையம் பழனிச்சாமி ஆகியோரின் உருவப்படம், நினைவிடங்கள் கொண்ட நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

;