திருப்பூர், ஜூலை 18- பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் குறைகளைக் கலைந்து பலப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நுகர்பொருள் வாணிப் கழக மண்டல அலுவலகம் முன்பு வியாழனன்று சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் சோ.செஞ்சு டர்மணி தலைமை வகித்தார். தமிழ் நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் பி.கௌ தமன், நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எம்.ஏழுமலை, மண்டல செயல் தலைவர் எஸ்.துரை, மண்டலச் செயலாளர் எஸ்.மணிமா றன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
நுகர்பொருள் வாணிபக் கழகத் தில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், 2013 முதல் 16 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவகால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தரப் பணியிடங் களை வெட்டிச் சுருக்கக் கூடாது, மண் டல மாறுதல் வழங்கும்போது பணி மூப்பு அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் வழங்க வேண்டும், நீண்ட காலமாகப் பணிபுரி யும் விழிப்பு பணிக்குழு ஊழியர் களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், சுமைப் பணியாளர்க ளுக்கு இந்திய உணவுக் கழகம் (எப் சிஐ)க்கு இணையான கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நிர்வாகிகள் எம்.செல்வநா தன், எஸ்.பரமேஸ்வரன், எஸ்.நாக ராஜன், மு.மணி, சு.கோபாலகிருஷ் ணன், ரவி, ரெங்கசாமி, என்.முருகை யன், எஸ்.முருகன் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். முடிவில், மண்டலப் பொருளாளர் கே. செந்தில்குமார் நன்றி கூறினார்.