districts

img

ஊதியம், ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா

திருப்பூர், நவ.27- ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங் களை உடனடியாக தீர்வு காண வலி யுறுத்தி திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கம்,  பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கம்  இணைந்து புதனன்று தர்ணா போராட் டம் செய்தனர்.  ஓய்வூதியர் சங்க நிர்வாகி பழனி வேல்சாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாநில நிர்வாகி அண்ணாதுரை, ஒப்பந்த  ஊழியர் சங்க மாநில நிர்வாகி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த தர்ணா  நடைபெற்றது. ஊதிய மற்றும் ஓய்வூ திய மாற்றங்களை உடனடியாக தீர்வு  காண வேண்டும்.

பிஎஸ்என்எல் 4ஜி மற் றும் 5ஜி சேவைகள் வழங்குவதை விரை வுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஓய்வூதியர் சங்கக் கிளைச் செயலாளர் விசுவநாதன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் பா.சௌந்தரபாண் டியன் துவக்கி வைத்தார். மாநில அமைப்புச் செயலாளர் முகமது ஜாபர்  சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில நிர்வாகி அண்ணா துரை, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட  துணைச் செயலாளர் சண்முகம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சி.முருகானந்தம் நன்றி கூறினார்.