திருப்பூர், ஜுன் 13- மக்களை தேடி மருத்துவம் திட்டத் தில் பணியாற்றும் மகளிர் சுகாதார தன்னார்வலர்களுக்கு ஊதிய நிலுவை இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை யின் மூலமாக தொற்றா நோய்களை கண்டறிவதற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தில் சுய உதவிக் குழு உறுப்பினர்களை மகளிர் சுகாதார தன்னார்வலராக நியமித்து இம்ம ருத்துவத் திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்பு ரங்களில் முறையே 8,713 மற்றும் 2,256 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் துணை சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுகின்றனர்.
மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் இளஞ்சிவப்பு நிற மேலாடையுடன் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களை கண்டறிவர். பாதிப்புள் ளவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயாளிகளுக்கு மருந்து களை வழங்கி வருகின்றனர். ஒவ் வொரு தன்னார்வலரும் மாதந்தோறும் 200க்கும் மேல் வீடுகள் சென்றிருக்க வேண்டும். திட்டத்தின் தொடக்கத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச் சனை இருப்போரை சோதித்து வந்த னர். பின்னர் கூடுதலாக மூன்று வகை யான புற்று நோய் சோதனை, காச நோய், தொழு நோய் பற்றிய பரிசோ தனைகளையும் செய்து வருகின்றனர். அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் அளிப்ப தோடு, ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி மன நோய்கள் பற்றிய சோதனைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் மூன்று வகை யாக மதிப்பீடுகள் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாதம் ரூ.4ஆயிரம் முதல் 550 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தமிழக அரசின் பெயர் சொல்லும் திட்டமாக பார்க்கப்ப டுகிறது. அதேநேரத்தில் இத்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் பல ருக்கு ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்ப டுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. வீடு தேடி மருத்தும் பார்க்கும் எங்களுக்கு அரசு ஊதியத்தை நிலு வையில் வைத்துள்ளது. உடனடியாக இதனை விடுவிக்க வேண்டும் என இத்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.