districts

img

மத நல்லிணக்கத்திற்கு மற்றுமொரு சான்று கோயிலுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்

திருப்பூர், டிச. 7 - மதவெறி சக்திகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மாற்று மதத்தினர் மீது வெறுப்பை விதைத்து பிளவை ஏற்ப டுத்திக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் மத நல்லிணக்கத்துடன் சகோதர உணர்வுடனேயே வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். பல்லடத்தில் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் சீர்வரிசை கொண்டு சென்று கொடுத்த சம்பவம் மற்றுமொரு எடுத்துக் காட்டாக  உள்ளது.

பல்லடம் பொங்காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா  அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பல் லடம் வாழ் இஸ்லாமியர்கள், பெரும் எண்ணிக்கையில்  கோவிலுக்குச் சீர் வரிசை கொண்டு சென்று கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெ.இப்திகார் அகமது, எஸ்.காஜா மற்றும் மஹபூப் கான் பெரிய பாபு முயற் சித்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது 

முதல் நாள் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை  கொண்டு சென்றனர். இரண்டாம் நாள் காலை குடமுழுக்கு  நடந்தபோது, திருவிழாவில் கலந்து கொண்டோருக்கு தாகம்  தீர்க்க குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. காலம் காலமாக  இரு மதத்தினரும் நல்லிணக்கத்தைப் பேணி வருவதை தொட ரும் விதமாக தற்போது இந்த நிகழ்வை இரு மதத்தினரும் இசைவுடன் மேற்கொண்டதாகத் தெரிவித்தனர்.