districts

img

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு- வே.தூயவன் -

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி குறு,  சிறு, நடுத்தரத் தொழில்கள், விவசா யம் சரிசமமாக நிறைந்த பகுதியாகும். எனவே வேலைவாய்ப்பு, விவசாய உற்பத் திக்கு உரிய கொள்கைகளை ஒன்றிய பாஜக அரசு அமலாக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 7 லட்சத்து 86ஆயிரத்து 475 ஆண்கள், 8 லட் சத்து 11ஆயிரத்து 718 பெண்கள், 250 மாற்றுப் பாலினத்தார் என மொத்தம் 15லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் கே.சுப்பராயன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

பரந்து விரிந்த நிலப்பரப்பு

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டு தொகுதிகளும், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி ஒன்றிய மும் மட்டுமே திருப்பூர் வருவாய் மாவட்டத் தைச் சேர்ந்தவை. அந்தியூர், பவானி, கோபி செட்டிபாளையம் மற்றும் பெருந்துறை தொகு திக்கு உட்பட்ட பெருந்துறை ஊராட்சி ஒன்றி யம், சென்னிமலை ஒன்றியத்தில் ஆறு ஊராட் சிகள் ஆகியவை ஈரோடு வருவாய் மாவட்டத் தைச் சேர்ந்தவை. எனவே பெயர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி என்று இருந்தாலும் பெரும்பான்மை பகுதிகள் ஈரோடு மாவட்டத் திற்குள் வருகின்றன.

பொதுவாக திருப்பூர் என்றால் பின்னலா டைத் தொழில் மையம் என்பதுதான் மேலோங் கிய அடையாளமாகத் தெரியும். உண்மையில் இந்த நாடாளுமன்றத் தொகுதி பின்னலா டைத் தொழில் மட்டுமின்றி பெரும்பான்மை யாக கிராமப்புற விவசாயத்தை மையப்படுத் தியதாகும். அத்துடன் அனுப்பர்பாளையம் பாத்திரம், பவானி ஜமுக்காளம், குன்னத் தூர் ரிக் வாகனத் தொழில், பல்வேறு பகுதி களில் பரவலாக நடைபெறும் விசைத்தறி, கைத் தறி உள்ளிட்ட சிறு, குறு தொழில்களும் உள் ளன.

முரண்பட்ட வளர்ச்சி நிலை

ஆண்டுக்கு ரூ.40ஆயிரம் கோடி அன்னியச்  செலாவணி, ரூ.20ஆயிரம் கோடிக்கு உள் நாட்டு சந்தை வர்த்தகம் செய்யும் திருப்பூர்  பின்னலாடைத் தொழில் தமிழகம் மட்டுமின்றி  பல வடமாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால் 2008ஆம் ஆண் டுக்குப் பிறகு இத்தொழில் கடும் நெருக்கடியை யும், நலிவையும் சந்தித்து வருகிறது.

குறிப்பாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி  வரி விதிப்பு, நூல் விலை உயர்வு என ஒன்றிய அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களில் நிலை குலைந்து போனது. திருப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனில் 30 சதவிகிதம் மட்டுமே தற்போது இயங்குகிறது.

இது முரண்பட்ட வளர்ச்சிப் போக்கை ஏற் படுத்தியுள்ளது. ஒருபுறம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர் தாக்குப்பிடிக்க முடியா மல், ஒரு பகுதியினர் வெளியேறியும், கணிச மானவர்கள் தத்தளித்துக் கொண்டும் இருக் கின்றனர். மறுபுறம் நாட்டின் முதல் நூறு பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இங்குள்ள  கே.பி.ஆர். குழுமம் சுமார் ரூ.17ஆயிரம் கோடி  மதிப்புடன் 100ஆவது இடத்தைப் பிடித்துள் ளது. வளர்ச்சி சமமாக இல்லை என்பதன் எடுத் துக்காட்டே இது.

செய்ய வேண்டியது என்ன?

பருத்தி விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுப்பதுடன், மூலப்பொருட்கள் விலை சீராக இருக்கும்படி நிலைப்படுத்து வது, வங்கிகள் குறு, சிறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவது, கடன் செலுத்தாத நிறுவனங்களை “செயல்படாத சொத்து” (என்பிஏ) என அறி வித்து முடக்கும் வங்கி நடைமுறையில், மாற் றம் செய்து, கால அவகாசத்தை அதிகரிப் பது, இந்திய சந்தையில் வந்து குவியும் வங்க தேசம், சீனா உள்ளிட்ட வெளிநாட்டு துணி, ஆடைகளுக்குத் தடுப்பு வரி விதிப்பது, வெளி நாட்டு சரக்குப் பெட்டக (கண்டெய்னர்) கட்டண  உயர்வுக்கு உரிய மாற்றுத் தீர்வு காண்பது போன்ற அடிப்படையான கொள்கை நிலை பாட்டை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண் டும். அதன்மூலம்தான் திருப்பூர் குறு, சிறு, நடுத் தர பின்னலாடைத் தொழில்கள் மேம்படவும், வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்தவும் முடியும்.

நகரமயம் “நரக”மயம்

சீர்மிகு நகரத் திட்டம் என ஒன்றிய அரசு திருப்பூருக்கு சுமார் ரூ.1000 கோடி திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இது அனைத்தும் கட்டிடங்கள் கட்டுமானமாக உள்ளன. நகர மக்களுக்கு வாழ்வு சவாலான தாக உள்ளது. மக்களுக்கு தேவையான குடி யிருப்பு, குடிநீர், தெருவிளக்கு, சாலை, சாக் கடை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

கொட்டிக்கிடக்கும் கோரிக்கைகள்

பெருந்துறை சிப்காட்டிலுள்ள தொழிற் சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், நிலத் தடி நீர் மாசுபடுவதாக சுற்றுவட்டார மக்கள்  தொடர்ந்து புகார் கூறுகின்றனர். அப்பிரச்ச னைக்குத் தீர்வு காண வேண்டும். காவுத்தம் பாளையத்தில் தொல்பொருள் ஆய்வு மேற் கொள்ள வேண்டும், ஊத்துக்குளி - சென்னி மலை சாலை மேம்பாலம் அமைக்க வேண் டும். ஊத்துக்குளி ரயில் நிலையம் விரிவாக் கம் செய்ய வேண்டும், ஆறு வழிச்சாலை நான்கு வழிச்சாலை இணையும் செங்கப் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப் பதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என் பது இப்பகுதி மக்களின் கோரிக்கைகள்.

கோபிசெட்டிபாளையம் நகரின் மையப் பகுதியில் ராம் நகரில் பிஎஸ்என்எல் அலுவல கம் உள்ளது. அதேசமயம் கோபி தபால் நிலையம் நாகர்பாளையம் புறநகரப் பகுதி யில் அமைந்துள்ளது. அந்த தபால் நிலை யத்தை ராம் நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலு வலகத்தில் செயல்படுவதற்கு ஏற்பாடு செய் தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

கோபி தாலுகா, நடராஜ் நகர் பகுதியில்  சமுதாய நலக்கூடம் இடிந்து மக்கள் பயன்ப டுத்த முடியாத நிலையில் மூன்றாண்டுகளாக உள்ளது. அந்த சமுதாய நலக்கூடத்தை புதுப் பித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண் டும் ஆகியவை இந்த பகுதி மக்கள் கோரிக் கையாக உள்ளது. 

புகழ்பெற்ற பவானி ஜமக்காளம் 

பவானியின் புகழ்பெற்ற ஜமக்காள உற் பத்தி தற்போது நலிவடைந்த நிலையில் உள் ளது. இத்தொழிலில் ஈடுபடுவோரின் கோரிக் கைகள் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு சென்றடைவதில்லை. பவானியிலும், சாயக் கழிவுநீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக இருக்கிறது. பவானி ஜமக்காளம், மற்றும் விவ சாய விளைப் பொருட்களுக்கு உரிய விலை  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணை,  பெரியஏரி, கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் ஏரி உள்ளிட்ட 7 ஏரிகள் உள்ளன. ஆனாலும் நீர் மேலாண்மையில் கோட்டை விட்டதன் விளைவு தொகுதியின் பெரும்பாலான பகுதி கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. தொகுதியையொட்டி ஒருபுறம் பவானி ஆறும், மற்றொருபுறம் காவிரி ஆறும் ஓடுகிறது. ஆனா லும் மழையை நம்பியே விவசாயிகள் உள்ள னர். மேட்டூர் வலதுகரை உபரி நீர் பாசனத் திட்டம், மணியாச்சிப்பள்ளம் திட்டம், தோணி மடுவு திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று பல ஆண்டுக ளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தியூர் வாரச்சந்தை ஈரோடு மாவட்டத்தி லேயே பெரிய சந்தை. ஆனால் வாரச்சந்தை  பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல் லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வியாபாரம் செய்யும் அவலநிலை தொடர்ந்து கொண்டுள் ளது. அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள் ளிட்ட பேரூராட்சிகளில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதே போல மலைக் கிராமங்களில் வனவிலங்குகள் விளைநிலங்க ளில் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்தியூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, பர்கூர் மலைப்பகுதியில் வாழும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று, பர்கூரில் அரசு மருத்துவமனை, கைத் தறி பட்டு நெய்வதற்கு தேவையான மூலப் பொருட்களை மானிய விலையில் வழங்கு வது, அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறி யீடு, விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற வேண் டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகளை அள்ளிவீசும் ஒன்றிய அரசும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் வரக்கூடிய பட்ஜெட் டில் இது குறித்து அறிவிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. ஆனாலும் இந்த கொள்கை களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அழுத் தம் கொடுக்க வேண்டியது அவசியம். அப் போதுதான் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நிறைந்த, விவசாயம் கணிசமாக நடைபெ றும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மலர்ச்சி பெறும். இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?