திருநெல்வேலி, ஆக. 13- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியுடன் அணு உலை கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 1,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 என மொத்தம் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப் பட்டு வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து அதன் மூலம் மின் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது.
தொடர்ந்து 5 மற்றும் 6-ஆவது அணு உலைகள் அமைக்கும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வரும் முதல் இரண்டு அணு உலைகளில் செறிவூட்டப் பட்ட யுரேனியம் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வரு கிறது. ஒரு அணு உலைக்கு 163 எரிக்கோல்கள் பொருத் தப்படும். இதில் 3-இல் 1 பங்கு எரிக்கோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். இதற் காக மின் உற்பத்தி 2 மாதங் களுக்கு மேல் நிறுத்தப் படும். இதனால் எரிபொருள் மாற்றும் காலங்களில் மின் சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த எரிபொருளை இந்தியா - ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்தின்படி ரஷ்ய நிறுவனமான ரோஸாடாம் கூடங்குளத்திற்கு விநியோ கம் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருள் உற்பத்தி செய்யும் பணியை ரஷ்யா வின் ரோஸாடாம் நிறுவனத் தின் ஒரு அங்கமான ‘டிவி இஎல் ஜேஎஸ்சி’ என்ற நிறு வனம் தொடங்கி உள்ளது. இதற்காக இந்தியா-ரஷ்யா இடையே ரூ. 10 ஆயிரத்து 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது புதிய வகை எரிபொருள் வழங்க உள்ள இந்த டிவிஇஎல் நிறுவனம் உலகம் முழுவதும் ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டத் தில் உள்ள 14 நாடுகளுக்கு இந்த எரிபொருளை வழங்கி அதன் மூலம் ஆண்டுக்கு 400 பில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.