districts

img

குடும்பத்தினரை நேரில் சந்தித்து சிபிஎம் ஆறுதல்; தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

திருவாரூர், மே 15 -  திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  வட்டம் வேலங்குடி ஊராட்சிக்குட் பட்ட கமுதகுடியைச் சேர்ந்தவர்கள் லெனின்-லதா. இவர்களின் மகன் மணிகண்டன்(25). டிப்ளமோ வரை படித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு வந்திருந்தார். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இவரது தாயார் லதா (ID No: TN128521738) பய னாளியாக தேர்வு செய்யப்பட்டு கட்டு மானப் பணிகள் நடைபெற்று வந்தன.  வெளியாட்களை வைத்து பணி செய்ய வசதியில்லாததால் ஒட்டு மொத்த குடும்பமும் கட்டுமானப் பணி களில் ஈடுபட்டு வந்தனர். 

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் 

இந்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் துவங்கப் பட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம்  என்றாலும்கூட, மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதிலும் 80 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு 48  ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத் தின் படி 25 சதுரமீட்டர் (269 சதுர அடி)  வீடு கட்டித் தரப்படுகிறது. இத்திட்டத் தில் 4 தவணையாக பணம் விடு விக்கப்படுகிறது.  அஸ்திவாரம் அமைந்தவுடன் முதல் தவணை, சன்னல் மட்டம் வரை இரண்டாவது தவணை, கூரை மட்டம்  வரை மூன்றாவது தவணை, பூச்சு  வேலைகள் முடிந்தபிறகு நான்காவது  தவணைத்தொகை  விடுவிக்கப்படு கிற நடைமுறை உள்ளது. இதில் 4 கட்டமாக 104 மூட்டை சிமெண்ட், 320  கிலோ இரும்பு கம்பிகள் வழங்கப் பட்டு அதற்கான செலவீன தொகை  திட்ட மதிப்பில் கழித்துக் கொள்ளப்ப டும். மீதமுள்ள தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

உயிரைக் குடித்த லஞ்சம் 

நன்னிலம் ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சி அலகில் பணி மேற்பார்வை யாளராக இருந்தவர் எம்.மகேஸ்வ ரன். இவர் மணிகண்டன் குடும்பத்தின ரின் வீடு கட்டும் பணிகளுக்கான தவணைத் தொகையை விடுவிக்க, துவக்கம் முதலே லஞ்சம் கேட்டு வந்துள்ளார். சொந்த வீடு கனவி லிருந்த மணிகண்டனும் ரூ.18 ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்துள்ளார். இந்நி லையில் மேற்பார்வையாளர் கொடுத்த உத்தரவாதத்தால், மணிகண்டன் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த  பணத்தையும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் கூரை மட்டம் வரை பூர்த்தி  செய்துள்ளார். ஆனால் மூன்றாவது தவணைத் தொகை விடுவிப்பதற்கு மேலும் லஞ்சம் கேட்டதால், “தன்னிடம் லஞ்சம்  கொடுக்க பணம் இல்லை என்றும், ஏற்கனவே ரூ.18 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், ரூ.36 ஆயி ரத்துக்கு கம்பி வாங்கிய கடன் இருப்பதாகவும், இதற்கு மேலும் லஞ்சம் கொடுக்க பணம் இல்லாத தால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும்” சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார்.  இதனால் பதற்றமடைந்து அவரைத்  தேடிய உறவினர்கள், உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரைக் கண்டெ டுத்து காரைக்கால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பல னின்றி புதன்கிழமை உயிரிழந்தார். 

சிபிஎம் கோரிக்கை 

தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மணிகண்டனின் குடும் பத்தினரை ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி நேரில் சந்தித்து நிலைமை களைக் கேட்டறிந்தார். அப்போது  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அக்குடும்பத்தினரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு  ஆறுதல் கூறினார்.  அவரிடம், “கம்யூனிஸ்ட் கட்சியி லிருந்த தனது தந்தையார் தனக்கு லெனின் என பெயர் வைத்ததாகவும், கம்யூனிஸ்ட் கட்சிதான் தங்கள் மகனின் மரணத்திற்கு நீதி பெற்றுத் தர வேண்டுமெனவும்” மணிகண்ட னின் தந்தை லெனின் கலங்கி னார். “எங்களுக்கு மோடி வீடே  வேண்டாம். லஞ்சம் கொடுத்து வீடு கட்ட எங்களுக்கு சக்தியில்லை. என்னைப்போல எத்தனை தாய்கள் மகனைப் பறிகொடுத்துட்டு நிக்குறாங் களோ” என மணிகண்டனின் தாயார்  அழுது புலம்பினார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, லஞ்சத்தின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளை ஞர் மணிகண்டனது குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும். வீடு கட்டும் கனவும் இடிந்து, மகனையும் இழந்து நிற்கும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை சரி செய்ய, ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்திருக்கும் மணிகண்டனின் இளைய சகோதரிக்கு அரசு வேலை  வழங்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அரசின் நலத்திட்டங்கள் பய னாளிகளுக்கு சென்று சேர்வதை அனைத்து மட்டத்திலும் கண்கா ணிக்க ஆய்வுக்குழு ஒன்றை அமைக்க  தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கேற்ற வகையில் சட்ட விதி களில் திருத்தம் கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.  இச்சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட கவுன்சிலர் ஜ.முகமது உது மான், ஒன்றிய செயலாளர் கே.எம். லிங்கம், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ராஜேந்திரன், இப்ராஹிம் சேட் மற்றும் கிளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.