உலக யோகா தினத்தையொட்டி, பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் என்.சி.சி. மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். உதவித் தலைமையாசிரியர் லோகநாதன், உடற்கல்வி இயக்குநர் முருகானந்தம், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.