districts

img

12 தொழிலாளர்கள் பணியிைட நீக்கம்

காஞ்சிபுரம், ஜூலை 29 - தென்கொரிய நாட்டின் நிறுவனமான எஸ்.எச்.சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை யில் சங்கம் அமைத்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 12 சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி திங்களன்று தொழி லாளர்கள் குடும்பத்தோடு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வல்லூர் கிராமத்தில் இயங்கிவரும்  எஸ்எச்சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக 12  நிர்வாகிகளை  ஆலை நிர்வாகம் பழி வாங்கியது.  இந்நிலையில் இந்நிறு வனத்தின் போக்கை தடுத்திட தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 29) சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ரங்கசாமி குளம் அருகிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி சிஐடியு மாவட்டச் செய லாளர் இ.முத்துக்குமார் தலைமையில் தொழிலாளர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  முத்துக்குமார் பேட்டி  இதன் பின்னர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.முத்துகுமார் பேசுகையில்; தென்கொரிய நிறுவனமான எஸ்.எச்.சி 12 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதை கண்டித்து  41 வது நாளாக தொழிலாளர்கள்  தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடிப்பதற்கு முழுக்க முழுக்க எஸ்.எச்.சி நிர்வாகத்தின் அராஜக போக்கே காரணம். இந்த தொழிற்சாலை  சட்டத்திற்கு விரோதமாக ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து வருகிறது. இந்த கொரிய   நிறுவனத்தின் மேலாளர் தொழிலாளர்களிடம் இதுவரை எந்தவித பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும்.  12 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்து மாவட்ட தொழிலாளர் நலத்துறையிடம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் நிறுவனம் வரமறுக்கிறது. இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ள தாகவும் முத்துக்குமார் மேலும் கூறினார். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், நிர்வாகிகள் எஸ் சீனிவாசன், ஆர்.மதுசூதனன், ஜி.வசந்தா, பி.ரமேஷ், அ.ஜெனிட்டன், வி.சிவப்பிர காசம், ஆர்.மதியழகன், பி.சீனுவாசன், எஸ். புவனேஸ்வரி, ஆர்.சௌந்தரி, பி.சசி தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.