districts

img

தார்ச்சலை அமைக்கும் பணி துவக்கம்

கரூர், மார்ச் 8-  கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வால்காட்டுப்புதூர் முதல், நத்தமேடு வரை செல்லும் பகுதியில், கடந்த 4 மாதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது புதிய தார்ச் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கரூர் மாநகரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ், கட்டுமான பணிகள் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் வால்காட்டுப்புதூர் முதல், நத்தமேடு வரை செல்லும் மண் சாலையில், இரண்டு சக்கர வாகனம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்தும் செல்கின்றனர்.   இந்த மண் சாலையில் மழை காலத்தில் மழை நீர் தேங்கி, சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இந்த மண் சாலையில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே, மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அந்த பகுதி பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட தொகை ரூபாய் 11 லட்சத்து 25 ஆயிரத்தை தங்களது பங்களிப்பாக 2024 ஆண்டு ஜனவரி மாதம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் காசோலையாக வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 11 மாதமாக தார்ச்சாலை அமைக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் பணியை கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்தும், உடனடியாக மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வால்காட்டுப்புதூர் கிளையின் சார்பில், கோரிக்கை களை வலியுறுத்தியும், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்சியின் கிளைச் செயலாளர் ராம கிருஷ்ணன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கும் போராட் டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.  கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, கிளை உறுப்பினர்கள் அன்புச்செல்வம், சாந்தி, ராஜேந்திர பிரசாத், சூர்யா, மாரிமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், மண் சாலையில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.  சிபிஎம் கட்சி ஒவ்வொரு ஊரிலும் இருக்க வேண்டும்  வாழ்காட்டுப்புதூர் முதல் நத்தமேடு வரை செல்லும் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.  தற்போது கடந்த 4 மாதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியது. தற்போது புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, எங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொரு  ஊரிலும் இருக்க வேண்டும். அப்போது தான், மக்களின் கஷ்டங்க ளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ் காட்டுப்புதுர் பொதுமக்கள் தெரிவித்தனர்.