கரூர் தான்தோன்றிமலை தனியார் திருமண மண்டபத்தில் புதனன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு உள்ளார்.