districts

img

வெற்றி முழக்கத்துடன் விவசாயிகளின் பிரம்மாண்டமான பேரணி

மயிலாடுதுறை, டிச.11 -  மயிலாடுதுறையில் ஐக்கிய விவ சாயிகள் முன்னனி சார்பில் பிரம்மாண்ட  வெற்றி பேரணி மாவட்ட ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான எஸ்.துரைராஜ் தலைமையில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது.  மூன்று வேளாண் சட்டங்களையும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு  விவசாயிகளின் ஓராண்டு கால தொடர் போராட்டத்தின் வாயிலாக ரத்து  செய்ததை கொண்டாடும் விதமாக நடை பெற்ற பேரணி மேம்பாலத்திலிருந்து (காவிரி நகர்) புறப்பட்டு பல்லாயிரக்க ணக்கான விவசாயிகள், பொதுமக்கள், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கத்தினரின் கம்பீர முழக்கத்துடன் பறையிசைத்து, நடனமாடி, பட்டாசு வெடித்து பூக்கடைத் தெரு, கூறை நாடு, காந்திஜிரோடு, கிட்டப்பா அங்காடி  வழியாக வந்து, விஜயா தியேட்டர் அருகே நிறைவடைந்தது. பின்னர் நடந்த விளக்க பொதுக்கூட் டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ், பேராசிரியர் ஜெயராமன், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உரையாற்றினர்.