திருச்சிராப்பள்ளி, ஜூலை 6-
திருச்சிராப்பள்ளி மாநக ராட்சி, சின்ன கொத்தமங்க லம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடம், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய மின் மோட்டார்- தண்ணீர் தொட்டி, கருமண்டபம் தெற்குத் தெரு பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் துளைக் கிணற்றுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் தண் ணீர் தொட்டியைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வியாழனன்று அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத் தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் மா.பிர தீப்குமார், மேயர் மு.அன்பழ கன், மாநகராட்சி ஆணை யர் இரா.வைத்திநாதன், மண் டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.