districts

img

ஒன்றிய அரசை கண்டித்து வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதா?

திருவாரூர், ஜன.30 - கோடிக்கணக்கான ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களை வெளியேற்றி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் மோடி தலை மையிலான பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத் த்துவதை தடுத்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு  ஆண்டும் ஒன்றிய அரசு நூறு நாள்  வேலைக்கான நிதியை குறைப்பதை கை விட்டு, தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை அட்டையில் ஆதார் இணைப்புடன்கூடிய பரிவர்த் தனை முறையை திரும்ப பெற வேண்டும்.  வேலை அடையாள அட்டை வைத்துள்ள  அனைவருக்கும் வேலை வழங்க வேண் டும். மூன்று மாதமாக நிலுவையில் உள்ள  சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வா யன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, டெல்டா மாவட் டங்களின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவாரூர் தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் சிபிஎம்  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரு மான எம்.சின்னதுரை தலைமை வகித்து  உரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் தலைமை தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசா யத் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை  ஒன்றியத் தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்கள் வி.மாரியப்பன், கே. பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ் குமார், மாவட்டப் பொருளாளர் சி.நாகரா ஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  வி.தொ.ச ஒன்றியச் செயலாளர்கள் கே.பெஞ்சமின் (பட்டுக்கோட்டை), ஏ.வி. குமாரசாமி (பேராவூரணி), இளங்கோ (சேதுபாவாசத்திரம்), ஏ.வி.பஞ்சாட்சரம் (மதுக்கூர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், பட்டுக்கோட்டை, திருவோ ணம், பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவா சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமா னோர் கலந்து கொண்டனர். 

திருச்சிராப்பள்ளி

விவசாயத் தொழிலாளர் சங்கம்  சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும் பூரை அடுத்த அசூர் தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசா யத் தொழிலாளர் சங்க தலைவர் பெரிய சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் தெய்வ நீதி, மாவட்ட குழு உறுப்பினர் ராம மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் குருநாதன் ஆகி யோர் பேசினர்.  வி.தொ.ச ஒன்றிய துணைத் தலைவர்  பெ.வீராசாமி தலைமையில் புலிவலம்  கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, மாவட்டச் செயலாளர் ஜெ. சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் நல்லுசாமி, மாதர் சங்க மாவட்டத்  தலைவர் லிங்கராணி ஒன்றிய செயலா ளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். பத்தாளப்பேட்டை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன்,  வாலிபர் சங்க தலைவர் தமிழ்செல்வன், விவசாய தொழிலாளர் சங்க பொருளா ளர் மகாலிங்கம், அன்பழகன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். 

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 இடங் களில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு ஒன்றியத் தலைவர் கே. என்.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் பி.ராமகுரு முன்னிலை வகித்தார்.  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பு செயலாளர் வீ.எம்.சர வணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி. விஜயகாந்த், விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் வைரவன் ஆகியோர் உரையாற்றினர். செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக் கூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜி. கருணாநிதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.முருகையன் விளக்கவுரையாற்றினார். சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாய  சங்க ஒன்றியச் செயலாளர் பி.தெட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தொடர்ந்து பேரணியாக சென்று ஆக்கூர் அஞ்சலகத்தில் மனு அளித்த னர். கொள்ளிடம் ஒன்றியம், புதுப்பட்டி னம் ஸ்டேட் பேங்க் முன்பு மண்வெட்டி, இரும்பு சட்டி, பாறை உள்ளிட்ட நூறுநாள்  வேலைக்கு பயன்படுத்தும் பொருட் களோடு புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நேதாஜி தலைமையில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் ஜி.ஸ்டா லின், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கேச வன் ஆகியோர் பேசினர். 

மயிலாடுதுறை ஒன்றியம், மாப் படுகை அண்ணாசிலை அருகில் ஒன்றியத் தலைவர் எம்.மணி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் காபிரியேல், விவசா யிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.மேக நாதன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கணேசன் ஆகி யோர் உரையாற்றினர். கழுக்காணிமுட்டத்தில் ஒன்றியச் செயலாளர் என்.செல்வராஜ் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச் சந்திரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.ஆர்.விஜய், மாவட்டத் துணைத் தலைவர் மணிமேகலை, மாவட்டக் குழு  உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர் உரை யாற்றினர். தரங்கம்பாடி ஒன்றியம், திரு விளையாட்டத்தில் ஒன்றிய துணைச் செய லாளர் வீ.குணாளன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செய லாளர் வீ.எம்.சரவணன், என்.பாலகிருஷ் ணன், டி.ஆர்.ராணி ஆகியோர் பேசி னர்.  எடுத்துக்கட்டியில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வபாக்யவதி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் காபிரியேல், ஒன்றி யச் செயலாளர் தமிழ்வாசகம், வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் ஐயப்பன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என். சந்திரமோகன், வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் பவுல் சத்தியராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. சலோமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர்கள் பேசி னர். இப்போராட்டங்களில் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.