கும்பகோணம், ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் அண்மையில் தொடர்ந்து வாகன நெரிசல் இருந்து வந்தது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நெரிசலைப் பயன்படுத்தி, வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனை தடுத்து நிறுத்திட கும்பகோ ணம் மாநகர காவல்துறையினர், “பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை தவிர இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வர அனுமதி இல்லை; மீறி வந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும்” என அறிவிப்பு பலகை வைத் துள்ளனர்.