districts

img

சிபிஎம் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளராக வி.சீனிவாசன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, நவ.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றிய 24 ஆவது மாநாடு  ஞாயிறன்று முத்தரசநல்லூர் சமுதாயக் கூடத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் முருகன், கோகுல் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  மாநாட்டு கொடியை மூத்த தோழர் நாராயணசாமி ஏற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாறன் துவக்க உரையாற்றினார். முத்தரசநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழுநேர மருத்துவர், செவி லியர்களை நியமிக்க வேண்டும். இலவச வீட்டு  மனை கேட்டு விண்ணப்பித்த 59 விவசாயத் தொழிலா ளர்களுக்கு இலவச  வீட்டு மனை வழங்க வேண்டும். கம்பரசம்பேட்டை முதல் முத்தரசநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும். அந்தநல்லூர் யூனியன் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தேவை யான விதை வழங்க  வேண்டும். விவசாயம் நிறைந்த பகுதியான சீரா தோப்பு, மருந்தாண்டக் குறிச்சியை மாநகராட்சியாக அறிவிக்கக் கூடாது என்பன  உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தநல்லூர் ஒன்றியச்  செயலாளராக வி.சீனிவாசன் உள்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் நிறைவுரை யாற்றினார்.