மயிலாடுதுறை, ஜூன் 13-
மயிலாடுதுறை மாவட் டம் மங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், திங் கட்கிழமை டாஸ்மாக் கடை யில் வாங்கிய மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் இருவர் சில மணி நேரங்களி லேயே உயிரிழந்தனர்.
குத்தாலம் தாலுகா தாத் தான்குடி பிரதான சாலை யில் வசிப்பவர் பழனிகுரு நாதன் (56). இவர், மங்கநல் லூர் சாலையில் கொல்லர் பட்டறை நடத்தி வருகிறார். பட்டறையில் அதே பகுதி யைச் சேர்ந்த பூரசாமி (65) என்பவர் கூலி வேலை செய்து வந்தார்.
திங்கள்கிழமை மாலை, பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணி மனை அருகே இருவரும் விழுந்துகிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். அவர்களது உடல்கள் உடற்கூராய்விற் காக திருவாரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக் கப்பட்டன.
இருவரும் மது வாங்கிக் குடித்ததாக சந்தேகிக்கப் படும் இரண்டு டாஸ்மாக் மது பாட்டில்கள், விழுந்து கிடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மது பாட்டில்களை மீட்டு, மது வின் மாதிரிகளை ஆய்வுக் காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கூறுகை யில், தடயவியல் ஆய்வ கத்தின் நிபுணர்கள் குழு வின் முதற்கட்ட ஆய்வில் பாட்டிலில் இருந்து எடுக் கப்பட்ட மதுபான மாதிரியில் சயனைடு கலந்ததற்கான தடயங்கள் இருப்பது தெரி யவந்துள்ளது. உடற் கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
குற்றவியல் நடை முறைச் சட்டம் 174-ஆவது பிரிவின் கீழ் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். உடற்கூராய்வு, மற்றும் ஆய்வக அறிக்கை களுக்குப் பின்னரே மர ணத்திற்கான காரணம் கண்ட றியப்படும் என்று கூறிய காவல்துறை அதிகாரி ஒரு வர், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.