திருச்சிராப்பள்ளி, நவ.7- மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி குழு சார்பில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா வியாழன் அன்று காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு மலைக்கோ ட்டை பகுதிச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். கட்சிக் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மணிகண்டன், ரமேஷ், செந்தில், லெனின், கனக ராஜ், இளையராஜா, செழி யன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட் டத்தின் பல்வேறு இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தொழிற் சங்கங்களின் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற கொடி யேற்று விழாவிற்கு, கட்சி யின் புதுக்கோட்டை மாநக ரச் செயலாளர் புதுகை பாண்டின் தலைமை வகித் தார். மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் கொடி யேற்றி வைத்து உரையாற்றி னார். இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஜி.நாகராஜன், சு.மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு சார்பாக நவம்பர் 7 சோச லிச புரட்சி தின விழா, அறந் தாங்கி அம்மா உணவகம் அருகிலும், எல்.என் புரத்தி லும் செங்கொடியேற்றி இனி ப்பு வழங்கி விமரிசையாக கொண்டப்பட்டது. இந்நிகழ்விற்கு அறந் தாங்கி நகர செயலாளர் வழக்கறிஞர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறந் தாங்கி அம்மா உணவகம் அருகில் கட்சியின் மாவட் டச் செயலாளர் எஸ். கவி வர்மன் கொடியேற்றி உரை யாற்றினார். எல்.என். புரம் பகுதியில், அறந்தாங்கி நகர குழு கர்ணா கொடியேற்றி அப்பகுதி மக்கள் முன்னிலையில், பாட்டாளி வர்க்க புரட்சியின் இன்றைய தேவையைப் பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கள் தென்றல் கருப்பையா, தங்கராசு, அறந்தாங்கி ஒன்றி யச் செயலாளர் நாராயண மூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோபால கிருஷ்ணன், சங்கர் மாணிக் கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க ஒன்றியச் செயலா ளர் பாண்டிகௌதம், சிஐடியு மாணிக்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அறந்தாங்கி ஒன்றியம் ரெத்தினக்கோட்டையில், நவம்பர் புரட்சி தின விழா வில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே. தங்கராஜ் செங்கொடியேற்றி, அனை வருக்கும் இனிப்பு வழங்கி னர். மாவட்டக் குழு தென்றல் கே. கருப்பையா, ஒன்றியச் செயலாளர் எம் நாராயண மூர்த்தி, ஒன்றியக் குழு உறுப் பினர்கள் எஸ். கோபால கிருஷ்ணன், ஆர். பால கிருஷ்ணன், எஸ். சங்கர், கிளைச் செயலாளர் ஆத்ம நாதன் மற்றும் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர். நாகப்பட்டினம் சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டக் குழு அலுவலகத் தில், உழைக்கும் மக்கள் கொடியான செங்கொடி யினை, சிபிஐஎம் நாகை மாவட்டச்செயலாளர் வி. மாரிமுத்து ஏற்றி வைத்தார். நாகப்பட்டினம் நகரச் செய லாளர் க.வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.