மேலாண்மை பயிற்சி
பாபநாசம், அக்.9 - பாபநாசம் அருகே அம்மா பேட்டையை அடுத்த வேம்பு குடியில் அட்மா திட்டம் சார்பில் பண்ணை கழிவு மேலாண்மை பயிற்சி நடை பெற்றது. இதில் அம்மா பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா உரையாற்றினார். இதில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார மேலா ளர் பிரகாஷ், உதவி மேலா ளர்கள் புனிதா அபிராமி, கண்ணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.
மினிலாரி பறிமுதல்
பாபநாசம், அக். 9 - மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் சுகுணா வெள்ளி யன்று ரோந்து பணியில் இருந்தபோது, காந்தாவனம் வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை மேற்கொ ண்டார். அதில் அரசு அனு மதியின்றி வெண்ணாற்றி லிருந்து மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, மணல் ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்தார்.
பயிற்சி முகாம்
பட்டுக்கோட்டை, அக்.9 - அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தின் (எ.ஐ.சி.டி.இ ) வழிகாட்டு தலின் படி, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பத் திறன் தூண்டல் பயிற்சி நடை பெற்றது. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கல்வியைத் தொடங்கும் முதல் பருவ மாணவ-மாணவிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின்(எ.ஐ.சி.டி.இ) வழிகாட்டுதலின் படி தொழில்நுட்பத் திறன் தூண்டல் பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.சீனிவா சன் தலைமை வகித்தார்.
திருச்சி காவல் ஆணையரிடம் மனு
திருச்சிராப்பள்ளி, அக்.9 - விவசாயிகள் விரோத 3 வேளாண் சட்டங்களை திரும் பப் பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திருச்சியில் அக்.11 அன்று முதல் நவ. 26 வரை தொ டர்ந்து 52 நாட்கள் உண்ணா விரத போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதி கள் இணைப்பு விவசாய சங் கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதி கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயி கள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாநகர காவல் ஆணையரை சனியன்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.
திருச்சியில் நாளை தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
திருச்சிராப்பள்ளி, அக். 9 - தேசிய தொழில் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தொழில் பழகுநர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அக்.11 அன்று நடை பெறுகிறது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகா மில் கலந்து கொள்ளும் தொழில் பழகுனர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.7000 முதல் ரூ.10,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். எனவே ஐடிஐ தேர்ச்சி பெற்ற, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்கள் அப்ரன்டீஸ் பயிற்சி பெற்று அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.