districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருவள்ளுவர்  சிலைக்கு மரியாதை

பாபநாசம், ஜன.15 - திருவள்ளுவர் தினத்தை  முன்னிட்டு உலகத் திருக் குறள் மையம் சார்பில் பாப நாசம் வித்யா பாடசாலை அருகில் அமைந்துள்ள திரு வள்ளுவர் சிலைக்கு மாலை யணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி யில் திமுக மாவட்டச் செய லாளர் கல்யாணசுந்தரம் திரு வள்ளுவர் சிலைக்கு மாலை யணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக மாவட்ட  இளைஞரணி துணை அமைப் பாளர் துரை முருகன், இந்தியன் ரெட் கிராஸ் சொ சைட்டி பாபநாசம் கிளைப் புரவலரும், பண்டாரவாடை திமுக பிரமுகருமான லயன் நவநீத கிருஷ்ணன், திமுக பாபநாசம் கிளைச் செயலர் கபிலன், பாபநாசம் காவல் டிஎஸ்பி பூரணி, திருக்குறள் மைய நிர்வாகிகள்  பலர் பங்கேற்றனர்.

முகக்கவசம் வழங்கல்

பாபநாசம், ஜன.15 - இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டி சார்பில் கொ ரோனா தடுப்பு நடவடிக்கை யாக பாபநாசத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர்,  முகக் கவசம் வழங்கப்பட் டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளைப் புரவலரும், ஆயுட் கால உறுப்பினருமான நவ நீத கிருஷ்ணன் பொதுமக்க ளுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கினார். இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொ சைட்டி உறுப்பினர் சிவசக்தி ராஜா, வக்கீல் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மீன் வளர்ப்பு  செயல்விளக்கம்

பாபநாசம், ஜன.15 - அட்மா திட்டத்தின் கீழ்  பாபநாசம் அருகே பெரு மாங்குடியில் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு தொ டர்பான செயல் விளக்கம் நடைபெற்றது. முன்னோடி விவசாயி சுந்தரவேல் வய லில் செயல் விளக்கம் நடை பெற்றது. பண்ணை குட்டை  வறட்சி காலத்தில் தண்ணீர்  சேமிக்கவும், மீன் வளர்ப்பதி னால் விவசாயிக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. பண்ணை குட்டையில் 120  கட்லா வகை மீன் குஞ்சுகள்  வளர்க்கப்பட்டு வருகின்றன. மீன் வளர்ப்பால் ஆண்டிற்கு சராசரியாக ரூ.28,000 வரை வருமானம் கிடைக்கிறது. செயல் விளக்கத்திற்கான ஏற்பாட்டினை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்கு நர் மோகன் அறிவுறுத்தலின் பேரில் அட்மா திட்ட தொழிற் நுட்ப மேலாளர் சிவரஞ்சனி, உதவி தொழிற்நுட்ப மேலா ளர் ரஞ்சனி செய்திருந்தனர்.

போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வப் பயிலும் வட்டத்தின் இணையவழி பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், ஜன.15 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான, ஆண்டுத்  திட்டத்தின்படி தொகுதி 2 (பல்வேறு தமிழக அரசு துறைகளில் வருவாய் உதவியா ளர், உதவியாளர், கிளர்க் உட்பட) மற்றும் தொகுதி 4 (இளநிலை உதவியாளர், தட்டச்சர்  மற்றும் விஏஓ) தேர்வுகளின் வாயிலாக நிரப்பப் படும் காலிப் பணியிடங்களுக்கான விளம்பர  அறிவிப்பு முறையே பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது.  இதனைத் தொடர்ந்து, தமிழக அரசால்  அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா பெருந் தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு தஞ்சா வூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மறுசீரமைக் கப்பட்ட பாடத்திட்டம் குறித்த இலவச இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் ஜன.20 (வியாழனன்று) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட வுள்ளது.  இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2  மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கு அனுபவ மிக்க சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு  இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவ தோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித்  தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த  போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர் கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித்தகுதி யினை குறிப்பிட்டு studycircletnj@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8110919990 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ தகவல் அனுப்பி இப்பயிற்சி வகுப்பில் பங் கேற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.  மேலும், தொடர்புக்கு அலுவலக தொலை பேசி எண்: 04362-237037 தொடர்பு கொள்ள லாம் எனவும் தெரிவித்துள்ளார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.15 - திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க  வேண்டும் என பேராவூரணியில் நடைபெற்ற  திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக் கும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சேது  சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர்  மருத்துவர் துரை.நீலகண்டன். தமிழார்வல ரான இவர் திருவள்ளுவர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, திருக்குறளில் இருந்தே உதாரணம் சொல்லி ஆலோசனை வழங்கக் கூடியவர்.  இவர் தன்னுடைய மருத்துவமனை வளா கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரு வள்ளுவர் சிலையை அமைத்துள்ளார். தின மும் திருவள்ளுவரை வணங்கிய பிறகே  தன்னுடைய மருத்துவ பணியை தொடங்கு வார். இந்நிலையில், மருத்துவர் துரை.நீல கண்டன் ஏற்பாட்டில், சனிக்கிழமை, திருவள் ளுவர் தினத்தன்று, பேராவூரணி திருக்குறள்  பேரவை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு  மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்தார். திருக்குறள் பேரவை பொறுப்பாளர் நா.வெங்க டேசன் வரவேற்றார். தொழிலதிபர் ஏசியன் ஹெச்.சம்சுதீன், முன்னாள் வர்த்தக சங்க  தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், முன்னாள் பொருளாளர் எஸ்.ஜகுபர் அலி, திருக்குறள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக கொன்றை சண்முகம் நன்றி கூறி னார். இதில், திருக்குறளை தேசிய நூலாக  அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகளை கையகப்படுத்திய மாநகராட்சி

தஞ்சாவூர், ஜன.15 -  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், மாநக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடைகள் கட்டப்பட்டு, பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இக்கடைகளை வாட கைக்கு எடுத்த சிலர் சட்ட விரோதமாகக் கூடுதல் தொகைக்கு  உள் வாடகைக்கு விட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்க ளுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது, புதிய பேருந்து  நிலைய முகப்பில் வலது புறமுள்ள டாஸ்மாக் மதுக்கடை, மதுக்கூடம் உள்பட 6 கடைகள் உள் வாடகைக்கு விடப்பட் டுள்ளது தெரிய வந்தது. இதில், மாதம் ரூ.12,000 வாட கைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கடைக்கு உள் வாடகை மூலம்  மாதம் ரூ. 40,000 அளவுக்கு சட்ட விரோதமாக வருவாய் ஈட்டி  வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இக்கடைகளைக் காலி செய்யுமாறு உரிம தாரர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் கூறினர். இதை எதிர்த்து உரிமதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்த வழக்கில் மாநக ராட்சி நிர்வாகத்துக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் க.சரவண குமார் முன்னிலையில், இந்த 6 கடைகளையும் அலுவலர் கள் கையகப்படுத்தி, தங்களது பூட்டுகளைப் போட்டு பூட்டினர்.  பின்னர், இக்கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் கைப்பற்றப் பட்ட விவரம் குறித்து தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.

பயறு வகை சாகுபடி: தொழில்நுட்ப கருத்தரங்கம்

அரியலூர், ஜன.15 - அரியலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயிறு வகை சாகுபடி மற்றும் கிசான் விவசா யிகள் ஒருங்கிணைப்பு குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்  விக்கிரமங்கலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் அசோகன் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை துணை  இயக்குனர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். பயிற்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, சோழமாதேவி கிரீடு வேளாண் அறி வியல் மைய முதுநிலை விஞ்ஞானி அழகு கண்ணன் ஆகி யோர் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பா டுகள் குறித்து கருத்து வழங்கினர். வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முன்னதாக வேளாண் சார்ந்த பல்வேறு  இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சி அரங்கத் தில் வைக்கப்பட்டிருந்தன. இப்பயிற்சியில் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயி கள் லந்து கொண்டனர்.

சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறை, ஜன.15 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் ஊராட்சி மன்ற அலுவ லக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி தலைவர்  ஏ.ஆர்.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சிங்காரவேலு மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் தூய்மைக் காவலர்கள் பொங்கல் வைத்தனர். விழாவில் மதங்களை கடந்து அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள், ஜமாத் தலைவர்கள், வர்த்தக சங்க  பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்எஸ்பதி தோப்பில் ஆண் சடலம் மீட்பு

அரியலூர், ஜன.15 -  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமை புரம் சிஎஸ்ஐ பள்ளி எதிரில் உள்ள ஆர்எஸ்பதி தோப்பில் தேவ னாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (60)என்பவர் இறந்து  கிடந்துள்ளார். இதனை அவ்வழியே ஆடு மாடுகள் மேய்க்க சென்ற மூதாட்டி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில்  உள்ளவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலை யத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார்  இறந்தவரின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்து வமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து  வருகின்றனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் ஒரு பையும்,  அதில் ஒரு விஷ பாட்டிலும் இருந்ததால் தற்கொலை செய்து  கொண்டாரா? அவர் எதற்காக இங்கு வந்தார்? யாரேனும் கொலை செய்து வந்து போட்டு இருப்பார்களா? என போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

குமரி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை

நாகர்கோவில்,  ஜன.15- கன்னியாகுமரி வாவத்துறை தூண்டில் வளைவு கடற்கரை பகுதியில் ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.  பின்னர் அவர்கள் இதுபற்றி பூதப்பாண்டி வனச்சரக அலுவகத்துக்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில் வனச்சரகர் திலீபன் உத்தரவு படி, மருந்து வாழ் மலை வனக் காப்பாளர் பிரபாகர், வனக் காவலர் ஜோயல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் அழுகிய ராட்சத கடல் ஆமையினை கைப்பற்றினர்.  பின்னர் அந்த ராட்சத கடல் ஆமை வாரியூர் கால்நடை மருத்துவரால் உடற்கூறு ஆய்வு செய்து மணலில் புதைக்கப்பட்டது.

தாயின் கல்லீரல் 2 வயது குழந்தைக்கு பொருத்தம் - திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை

திருச்சிராப்பள்ளி, ஜன.15 - திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் செங்குட்டுவன், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இளங்குமரன் ஆகி யோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:  உயிரோடு இருப்பவர்களிடம் இருந்து  உறுப்பு தானம் பெற்று அதை குழந்தை களுக்கு பொருத்துவது மிகவும் சவாலானது.  இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் இதுவரை  சென்னையில் மட்டுமே நடந்துள்ளது. இப்போதுதான் முதல் முறையாக திருச்சியில் நடந்துள்ளது.  சபானா பர்வீன் என்பவர் தனது 2 வயது குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு நோய், வாந்தி ஏற்படுகிறது என்று சிகிச்சைக்காக பல  மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும்  சரியாகவில்லை. மரபணு ரீதியான பாதிப்பில்  அவரது குழந்தைக்கு கல்லீரல் செயல் இழந்தது ஐந்து மாதங்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் அமோனியா சக்தி மூளைக்குச் சென்று உயிருக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க சிறப்பு  மருந்துகள் கொடுக்கப்பட்டு உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சை முயற்சிகள் தொடங்கின.  குழந்தைக்கு உறுப்பு தானம் செய்ய  அவரது தாய் சம்மதம் தெரிவித்தார். இதை யடுத்து அனைத்து பரிசோதனைகளுக்கும் பிறகு காவேரி மருத்துவமனையின் இரு பிரிவு களிலும் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வரின் ஒத்துழைப்போடு சபானா பர்வீனின் கல்லீரலை அகற்றும் அறுவை சிகிச்சை 10 மணி நேரம் நடந்தது.  இதன் பிறகு குழந்தையின் உடலில் பொருத்தும் அறுவைச் சிகிச்சை காலை 6 மணி யிலிருந்து இரவு 8 மணி வரை 14 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. குழந்தைகளின் ரத்த  நாளங்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதைப் பொருத்தி செயல்பட வைக்கும் முயற் சியில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த  நிலையில் தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இதேபோல துபாயில் பணியாற்றி வந்த 30 வயது வாலிபருக்கு ஒரு கிட்னி மற்றும் கல்லீரல் என இரண்டு 2 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில்  காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறுவை சிகிச்சைகள் முதல்வர்  காப்பீட்டு திட்டத்தில் நடந்தது குறிப்பிடத்தக் கது. இதுபோன்ற சவாலான அறுவை சிகிச்சை  நடந்துள்ளது திருச்சி மருத்துவத்துறை வர லாற்றில் ஒரு மைல்கல். இவ்வாறு அவர் கூறினார்.

108 ஆம்புலன்ஸ் சேவை  அரியலூரில் 26344 பேர் பயன்படுத்தி உள்ளனர் மாவட்ட மேலாளர் தகவல்

அரியலூர்,  ஜன.16 - 108 ஆம்புலன்ஸ் அரிய லூர் மாவட்ட மேலாளர் அறிவிக்கரசு செய்தி  குறிப்பில் தெரிவித்துள்ளதா வது: அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாக னங்கள் 18 செயல்பட்டு வரு கின்றன. அவசர அழைப்பு பெறப்பட்டு 8 முதல் 13 நிமி டங்களில் நகர்புறம் மற்றும் கிராம புறங்களுக்கு சேவை  அளிக்கும் வகையில் GPS  கருவி பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 26344 பேர் 108 சேவையை பயன்படுத்தியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதில் 2020 ஆம் ஆண்டை காட்டிலும் 2021 ஆம் ஆண்டு 21 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர். இதில் 7876 பேர் கருவுற்ற தாய்மார்களும், 2980 பேர் சாலை விபத்திற்காகவும் உபயோகித்துள்ளனர்.  கடந்த ஆண்டு மட்டும்  ஆம்புலன்ஸில் மருத்து வமனைக்கு செல்லும் வழி யில் கர்ப்பிணி பெண்க ளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு  23 குழந்தைகள் ஆம்புலன் ஸில் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொ ரோனா தடுப்பு நடவடிக் கையின் போது 4236 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர். மேலும் எதிர்பாராமல் விஷம்  குடித்தவர்கள் 1299 பேர்,  வயிற்று வலியால் பாதிக்கப் பட்டவர்கள் 1437 பேர்,  விலங்குகளால் தாக்கப்பட்ட வர்கள் 834 பேர், மாரடைப்பி னால் பாதிக்கப்பட்டவர்கள் 850 பேர். மூச்சு திணறலால் பாதிக் கப்பட்டவர்கள் 905 பேர்,  பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் 355 பேர், தற் கொலைக்கு முயன்றவர்கள்  234 பேர், இதர சம்பவங்களில் சிக்கியவர்கள் 4647 பேர் என  மொத்தம் 26344 பேர் பயன டைந்துள்ளனர். இதயம் மற்றும் நுரை யீரல் சம்பந்தப்பட்ட நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிப் பதற்காக வென்டிலேட்டர், ஈ.சி.ஜி மானிட்டர் போன்ற அதி நவீன கருவிகள் கொண்ட ஆம்பு லன்ஸ் அரியலூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் நிறுத்தப்பட்டுள்ளது.  பச்சிளம் குழந்தைகளுக் கான ஆம்புலன்ஸ் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வச திகளுடன் நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சராசரி யாக மாதம்தோறும் 45-க்கும்  மேற்பட்ட பச்சிளம் குழந்தை கள் காப்பாற்றப்பட்டு வரு கின்றனர்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.