திருச்சிராப்பள்ளி, அக்.21- திருச்சி புறநகர் மாவட்டம் உப்பி லியாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு வின் சாதாரண கூட்டம் திங்கட் கிழமை நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஹேமலதா முத்துச் செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொ துச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி க்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சிபிஎம் கவுன்சிலர் தளுகை இரா. முத்துக்குமார் சீத்தாராம்யெச்சூரிக்கு அஞ்சலி தீர்மானத்தை கொண்டு வந்தார். மேலும், அனைத்துக் கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து துவக்கத்திலும் முடிவில் நாட்டு பண்ணும் பாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். தளுகை அங்கன்வாடி மற்றும் நாகநல்லூர் ஊராட்சியில் நியாவிலைக் கடை புதிதாக கட்டித்தரவேண்டும்என்று கோரிக்கை வைத்தார். கூட்டத்தில் தென்புறநாடு ஊராட்சி டாப் செங்காட்டுப்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவர் கலைச்செல்வி சிலை அழகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் கலைச்செல்வி சிலையழகன் நன்றி கூறினார்.