பாபநாசம், ஜூன் 21 -
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், அறக் கட்டளை நிறுவனர் தி.கணேசன் ஆகி யோர் சிலை திறப்பு விழா மற்றும் பள்ளி யின் 40 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.
பள்ளி அறக்கட்டளை தலைமை அறங்காவலர் க.கலியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலையை மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அறக்கட்டளையின் நிறுவனர் தி.கணேசன் சிலையை, திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து விழாப் பேருரையாற்றினார்.
பள்ளி முதல்வர் முருகானந்தம் ஆண்ட றிக்கை வாசித்தார். 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனி யார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலு வலர் அமலா தங்கத்தாய் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன் பேசினார். பள்ளி துணை முதல்வர் மு.காளி தாஸ் நன்றி கூறினார்.