திருச்சிராப்பள்ளி, செப்.1 - டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் வெள்ளிக்கிழமை துவாக்குடி டோல்கேட்டில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பாரதி தலைமை வகித்தார். மறிய லில் ஈடுபட்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சேது பதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சங்கர், புறநகர் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் பாலக் குமார், தஞ்சை மாவட்ட தலைவர் அருளரசன், மாவட்ட செயலாளர் ஏசு ராஜா மற்றும் புதுக்கோட்டை நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.