அரியலூர், ஜூலை 7-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் வடக்கு தெருவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது அடைந்துள்ளது. இதனை சரி செய்யக் கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.
கடந்த 6 மாதமாக குடிநீர் சரியாக வராததால், மக்கள் மிக வும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் சூரியமணல்-புதுக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண் டம் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களி டம் நடத்திய பேச்சுவார்த்தையில், விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.