districts

வங்கிக் கடன் வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 24-

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றியப் பேரவை, ஒன்றியத் தலைவர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது.  

    இதில், 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு  செய்யப்பட்டது. தலைவராக தங்கப்பன், செயலாளராக பாசமலர், பொருளாளராக கவிதா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத் தலைவர் மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சாமியப்பன், ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.  

   மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ள  அனைத்து குடும்பங்களுக்கும் ஏ.ஏ.ஒய் கார்டு வழங்க வேண்டும். தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கு  தடையின்றி வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.