districts

img

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி வசூலிக்கும் கட்டணத்திற்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி வசூலிக்கும் கட்டணத்திற்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், பேரூராட்சி திருமண மண்டபத்தில் உடைந்து கிடக்கும் நாற்காலிகளுக்கு பதிலாக புதிய நாற்காலிகளை அமைக்க வேண்டும். குளியலறை மற்றும் கழிப்பறைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று சிறுகமணி பேரூராட்சி அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் அஜித்குமார், மாவட்டச் செயலாளர் சேதுபதி, புலிவலம் கிளைசெயலாளர் சின்னதுரை, பாரதிதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.