திருத்துறைப்பூண்டி, அக்.21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி தாலுகாவில், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கமும், சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். முகாமில் 120-க்கும் மேற்பட்டோர் பயன டைந்தனர். இதில் 40 பேர் மேல் சிகிச்சைக்காக, கோவை சங்கரா மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். முகாமில் அனைவருக் கும் பார்வை பரிசோதனை, ரத்த அழுத்தம், கண்புரை, சர்க்கரை அளவு, மருத்துவ பரிசோதனை, கண் அழுத்த பரி சோதனை செய்யப்பட்டது. பிரைட் பீப்பிள் சமுதாய கல்லூரி மாணவிகள் தன்னார்வ லர்களாக செயல்பட்டனர். திருவாரூர் மாவட்ட சங்கரா முகாம் மேலாளர் உமாநாத் நன்றி கூறினார்.