districts

img

திரு.வி.க கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 7 ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

திருவாரூர், ஜன.31 - திருவாரூரில் பணி நிரந்தரம் செய்ய  வலியுறுத்தி 7 ஆவது நாளாக உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வரும், திரு.வி.க அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரை யாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. திருவாரூர் திரு.வி.க அரசு அறிவியல் கலைக் கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். இங்கு 150-க்கும் மேற்பட்ட விரிவுரை யாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 108 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் வாக்குறு திப்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை நீதிமன்ற ஆணைப்படி ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ  விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் தொ டர்ந்து 7 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளியன்று இந்தப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உரையாற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் வி.சந்தோஷ், கல்லூரி கிளைத் தலைவர்  விக்னேஷ், கல்லூரி கிளை நிர்வாகிகள் சந்தோஷ்வரன், ரித்திகா, மோனிஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.