districts

திருச்சி முக்கிய செய்திகள்

‘சீமைக்கருவேல மரங்கள் இல்லா’ மாவட்டமாக மாற்றுவோம்! - ஆட்சியர்

புதுக்கோட்டை, ஜூலை 6-  சீமைக் கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும்  மரங்களை நடவு செய்யும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அரசு அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலை மையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “இக்கூட்டத்தில் கவிநாடு கண்மாய் குளக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்  கருவேல மரங்களை அகற்றி வருவது குறித்தும், குளக்க ரைகள் தூர்வாரப்பட்டு வருவது குறித்தும் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் கலந்தாலோசனை மேற்கொள் ளப்பட்டது. மேலும் இங்கு செடி, கொடிகள், சீமைக்கரு வேல மரங்கள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்றி  நன்மை தரும் மரக்கன்றுகளை நடவு செய்திட  தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சீமைக்கருவேல மரங்கள் இல்லா மாவட்டமாக மாற்றிட சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். 

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 6 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவி யல் சட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவி யல் சட்டங்களை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட் டங்களை நடத்த திமுக சட்டத்துறை அறிவித்தது. இதன்படி,  புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு மூத்த வழக்குரைஞர் எஸ்.திருஞான சம்பந்தம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் வீரையா, தெற்கு மாவட்ட வழக்கு ரைஞர் அணித் துணைத் தலைவர் வி.பரமசிவம், வடக்கு  மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் வழக்குரைஞர்கள் கே. ரங்கபதாகதேவி, யோகமலர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தீக்கதிர் செய்தி எதிரொலி: புதிய சாலை அமைப்பு

பாபநாசம், ஜூலை 6 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழ கத்தின் முக்கியமான சாலைகளுள் ஒன்று. இந்தச் சாலை யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரு கின்றன. இந்தச் சாலை கடந்த கும்பகோணம் மகா மகத்திற்கு முன்னர் போடப்பட்டது. தற்போது மழை நீர்  வடிகாலுடன் சாலை போடப்படுகிறது. 

இந்நிலையில் திருப்பாலைத் துறையில் ஒரு மாதத்திற்குள்ளாக போட்ட சாலை விரிசல் விட தொடங்கி யது. இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெள்ளி யன்று வெளியானது. இதன் எதிரொலியாக, விரிசல் விட்ட  சாலையை பெயர்த்து விட்டு, புதிதாக சாலை போடப்படு கிறது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி  மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தட்சிண ரயில்வே பென்சனர் சங்க பொன்மலை கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6 - தட்சிண ரயில்வே பென்சனர் சங்க பொன்மலை கிளை துவக்க விழா சனிக்கிழமை, திருச்சி மாவட்டம் பொன்மலை சங்கத்திடலில் நடந்தது. விழாவிற்கு திருச்சி  கிளை டிவிசன் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். டிவிசன் செயலாளர் மனோகரன் துவக்க உரை யாற்றினார். மத்திய சங்க நிர்வாகி மகேந்திரன் வாழ்த்துரை  வழங்கினார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவ ராக என். ராஜகோபால், செயலாளராக தர்மராஜ், பொரு ளாளராக என்.தயாநிதி உள்பட 15 பேர் கொண்ட நிர்வாக  குழு தேர்வு செய்யப்பட்டது. 

விழாவில் ரயில்வே மருத்துவமனையில், எலும்பு மருத்துவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். புறநோயா ளிகள் பிரிவில் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மருந்து  மட்டுமே வழங்கப்படுகிறது. அதனை செலுத்துவதற்கான சிரிஞ்ச் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண  சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 18 மாத டி.ஏ. அரியர்ஸ் வழங்க வேண்டும். நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்த பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற வர்களுக்கு notional இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய சங்க தலைவர் இளங்கோவன் நிறைவு உரை யாற்றினார். தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.

குப்பையைக் கொட்டும் போது 
தவறிய தங்க மோதிரம் மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்

தஞ்சாவூர், ஜூலை 6 - தஞ்சாவூர், கீழராஜவீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்  (37). இவர் சனிக்கிழமை காலை தனது வீட்டில் சேர்ந்த  குப்பையை கீழராஜவீதி அரண்மனை அருகில் உள்ள  குப்பைத்தொட்டியில், கொட்டியுள்ளார்.

பிறகு, வீட்டிற்கு  சென்று பார்த்தபோது, கையில் அணிந்திருந்த 6 கிராம்  தங்க மோதிரத்தைக் காணவில்லை என்பதை உணர்ந்து  அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது, குப்பை தொட்டியில் மோதிரம் விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனது வார்டு மாமன்ற  உறுப்பினர் தெட்சிணாமூர்த்தியின் உதவியை ரவிக்குமார்  நாடினார். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் தெட்சி ணாமூர்த்தி, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் எபின் சுரேஷுக்கு தகவல் கொடுத்தார்.

 சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி தூய்மைப் பணி  மேற்பார்வையாளராக பணிபுரியும் யோகலட்சுமி, தூய்மைப் பணியாளர்கள் செந்தில்குமார், சோமு, ரஞ்சித் குமார், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், குப்பைத்தொட்டி முழுவதையும் போட்டுத் தேடினர்.  அரைமணி நேர தேடலுக்குப் பிறகு கிடைத்த மோதி ரத்தை தூய்மைப் பணியாளர்கள் ரவிக்குமாரிடம் ஒப்படைத் தனர். பிறகு ரவிக்குமார் தனக்கு உதவிய தூய்மைப் பணி யாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு  பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 6- தஞ்சாவூரில் அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக் கான பணியிட மாறுதல் அந்தந்த வட்டாரத்துக்குள் சனிக்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் தஞ்சா வூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது.

இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர் நகரம், தஞ்சா வூர் புறநகர், பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோ ணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களில் உள்ள 422 அரசு தொடக்கப் பள்ளிகளும், 105 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவும்,  ஆசிரியர்கள் விரும்பும் இடத்துக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி காலியாக உள்ள 6 இடைநிலை ஆசிரியர் பணியி டங்களுக்கு 104 பேர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்த னர். அதே போல் காலியாக உள்ள 29 இடைநிலை ஆசிரி யர்கள் பணியிடங்களுக்கு 104 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவ லகத்தில் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். பணி மூப்பின் அடிப்ப டையில் அவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று பணியிட  மாறுதல் ஆணையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மா.அய்யாக்கண்ணு வழங்கினார். இதைத் தொடர்ந்து ஜூலை 8 அன்று வட்டார அளவில் பணி யிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

நலவாரிய குளறுபடிகளை சரிசெய்க! சிஐடியு பிரச்சார இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6- 72 லட்சம் நலவாரிய பதிவுகளை மீட்டெடுத்து, நலவாரிய  குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். நலவாரிய பதிவை  நேரடியாக செய்ய வேண்டும். பணப் பயன்கள் கேட்பு மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

பணப்பயன்களை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு முறைசாரா தொழி லாளர்கள் சங்கம் சார்பில் ஜூலை 16 அன்று பேரணி மற்றும் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இதுகுறித்த பிரச்சார இயக்கம் சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று திருச்சி மாவட்டம் காந்தி  மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.

பிரச்சார இயக்கத்திற்கு சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, சிஐடியு  மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மலைக் கோட்டை பகுதிச் செயலாளர் லெனின் ஆகியோர் பேசினர்.  சுமைப்பணி சங்க மாவட்டப் பொருளாளர் விஜி நன்றி கூறினார்.