மயிலாடுதுறை, நவ.25- மயிலாடுதுறை மாவட் டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரம்பூர் ஊராட்சியின் நிர்வாகச் சீர்க்கேட்டை கண்டித்து, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் பாடை கட்டி, தாரை தப் பட்டை இசைத்து, சவ ஊர் வலமாக வந்து நூதனப்போ ராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங் கத்தின் கிளைச் செயலாளர் சி.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ. அறிவழகன், ஒன்றி யச் செயலாளர் ஸ்டாலின், சங்க நிர்வாகிகள் ஆனந்த ராஜ், வெற்றிச்செல்வன், மணிகண்டன், காமேஷ் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர். பெரம்பூர் தெற்கு வீதி முதல், மேல வீதி வரையில் உள்ள சாலையை உடனடி யாக சீர்செய்திடு, குண்டும் குழியுமாக உள்ள பெரம்பூர் முதல் பாலூர் வரை செல் லும் தார்ச்சாலையை உட னடியாக சீர் செய்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை களை முன் வைத்தும் கண்டு கொள்ளாமல் செயலற்று அலட்சியம் காட்டும் ஊராட்சி நிர்வாகத்தை கண் டித்தும் பெரம்பூர் பகுதியி லுள்ள முக்கிய வீதிகள் வழி யாக பாடையுடன் ஊர்வல மாக வந்து, கடைவீதியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொ டர்ந்து, வாலிபர் சங்க நிர்வா கிகளுடன் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி யளித்தனர். நூதனப்போ ராட்டத்தில் இறந்தவர் போன்று பாடையில் படுத்து ஜே.செல்வராஜ் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் போராட்டத்திற்கு வலுசேர்த்தார்.